வியாழன், 28 மே, 2015

அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

அவர் ஒரு புதிய காரை விலைக்கு வாங்கினார். அந்த வார இறுதியில் காரை வாசல் முன் வைத்து காருக்குள் ஏதோ வேலை செய்து கொன்டிருந்தார். வேலை மும்முரத்தில் அங்கு வந்த அவரது மூன்று வயது மகனை அவர் கவனிக்கவில்லை.

மெல்ல காரின் அருகில் வந்த அவர் மகன், தன் தந்தை தன்னை கவனிக்கவில்லை என்பதை அறிந்ததும், தந்தையைப் போலவே வேலை செய்வதாய் பாவனை செய்து கொன்டு கீழே கிடந்த கூர்மையான ஓர் ஆயுதத்தை கையில் எடுத்தான் , அந்தக் காரின் ஓரத்தில் தன் மனம் போன போக்கில் கிறுக்கத் துவங்கினான், அந்தப் புதிய காரில் சில கீறல்கள் விழுந்தன.

காரிலிருந்து வெளிவந்த அவன் தந்தைக்கு அவர் கண்ட காட்சி இரத்தத்தை கொதிக்க வைத்தது. புதிய காரில் அந்தச் சிறுவன் கிறுக்கியிருந்தது கண்டு அவன் தந்தைக்கு கோபம் தலைக்கேறியது, கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவன் தந்தை, அந்தச் சின்னஞ்சிறு பாலகனின் கைகளை தரையில் வைத்து தமது கையிலிருந்த சுத்தியலால் பலங்கொன்ட மட்டும் ஓங்கி ஓங்கி அடித்தார். அந்தச் சிறுவனின் பிஞ்சுக் கைகளிலிருந்து இரத்தம் பீரிட‌ அவனின் ஓலம் அவ்விடத்தையே அதிர வைத்தது. ஆத்திரம் தீர அடித்துவிட்டு சுத்தியலை தூர எறிந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே சென்று ஆத்திரம் குறைந்த சில நிமிடங்கள் கழித்து தமது செயலின் உக்கிரம் புரிய ஓடிவந்து வெளியில் இரத்த வெள்ள‌த்தில் மயங்கிக் கிடந்த மகனை அள்ளிக்கொன்டு மருத்துவமனை சென்றார், சிறுவனுக்கு சிகிச்சை முடிந்து கைகளில் கட்டுப் போடப்பட்டது.

அவனை சென்று கண்டார் அவன் தந்தை, சிறுவனின் பத்து விரல்களும் பலமான சுத்தியல் அடியால் நைந்து போய் சேதமடைந்துவிட்டதால் அவன் கைகளிலிருந்து முற்றாக‌ அகற்றப்பட்டிருந்தன, அவர் மகன்

"அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்றான்,

மெளனமாய் நின்றிருந்த தன் தந்தையை நோக்கி முடமாகிப்போன தன் கைகளை நீட்டிக்காட்டி

"அப்பா எனக்கு மீண்டும் எப்பொழுது புதிய விரல்கள் முளைக்கும் ?

மகன் கேட்டான். தந்தை வாயடைத்துபோனார் அதற்கு மேல் அங்கே நிற்கவும் அழுகையை அடக்கவும் முடியாமல் சொல்லொனா வேதனையுடன் வீடு திரும்பினார். மகன் காரில் கிறுக்கியிருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன.

"அப்பா உங்களை நேசிக்கிறேன்" / (I love you daddy)

என கிறுக்கியிருந்தான் மகன். மனமுடைந்து போன அந்த தந்தை வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக்கொன்டார் !

ஆத்திரம் அறிவுக்கு மட்டுமல்ல, அன்புக்கும் , ந‌ட்புக்கும் கூட சத்துருதான்

சிவனேஸ்
27/5/2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக