
"மோனமாகிறபோது ரமணராகவும் கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பு" என்று தன்னைப் பற்றி விவரிக்கும் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் உரைகளை செவிமடுத்தவர்கள் அவரின் கூற்றிலுள்ள உண்மையை நிச்சயம் மறுதலிக்கமுடியாது.
கலைமாமணி விருது பெற்ற சுகி.சிவம் அவர்கள் நாவன்மை மிக்கவர். சுவாரசியமாக உரையாற்றக்கூடியவர், சிறந்த எழுத்தாளர். ஆழமான விக்ஷயங்களையும் மிகவும் எளிதாக மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துச்சொல்லக்கூடிய திறமைசாலி.
புராதணம், புராணம், வேதம், ஆகமம், மதம், இறை, மனித வாழ்வு நெறிகள் குறித்த இவரது விரிவான விளக்கங்கள் மனிதம் விலகி கணிணி வாழ்வுக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் இன்றைய மாந்தர்களுக்கு மிகமிக அவசியமானவையாகும். இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிப்பீடியாவில் உள்ள இந்தப் பதிவு உதவும் http://ta.wikipedia.org/wiki/சுகி._சிவம்
இவரின் உரைகளையும், நூல்களையும் ஓரளவு படித்ததுண்டு, இவரின் நேர்த்தியான கருத்துகளைக் கேட்டும், படித்தும் வியந்ததுண்டு. அவை யாவற்றையும் மீறி ஒரு சிரிப்பும் தோன்றுவதைத் தடுக்க முடிவதில்லை, அதற்குக்காரணம் ஒன்று உண்டு....
சிங்கையில் வாழ்ந்த காலம், அப்போது சிங்கையின் பிரபலமான ஒரு அரங்கில் ஒரு நடிகரின் நூல் வெளியீட்டு விழாவும், சில பிரமுகர்களின் இலக்கியப் பேருரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொன்ட சிங்கையைச் சேர்ந்த தோழி ஜைனாப் பேகமும் அந்த நிகழ்வில் கலந்து கொன்டோம்.
அவருக்குப்பின் புகழ்பெற்ற அந்தக் கவிஞர் மிடுக்காக எழுந்தார், ராஜ நடை நடந்து ஒலிப்பெருக்கியை நெருங்கினார். தனக்கேயுரிய பாணியில் பேசினார், பேசினார், பேசிக்கொன்டே இருந்தார். :)
நேரம் கடந்து கொன்டிருந்தது, கூட்டம் பரிதாபமாக விழித்துக்கொன்டிருந்தது. நாமும்தான் ! சுகி.சிவம் அவர்கள் அமைதியாக யாவற்றையும் பார்த்துக்கொன்டிருந்தார். கவிஞர் பேச வேண்டிய தலைப்பில் காதல் என்ற வார்த்தை இருந்தாலும் இருந்தது, அது அவர் வாயில் சிக்கி படாதபாடு
பட்டுக்கொன்டு தவித்தது. :) ஆனால் கவிஞரோ நகைச்சுவையாகப் பேசுகிறோம் என நினைத்துக்கொன்டு காமத்தை வாரி வாரி வார்த்தைகளில் வழியவிட்டுக்கொன்டிருந்தார்.
காதல் குறித்து புதிய கண்ணோட்டத்தில் பலப்பல பொன்மொழிகளை உதிர்த்தார்...!? அதில் ஒரு வரி " நாற்பதிலும் ஒருமுறை காதல் வரும், சேலை தேடச் சொல்லும் ,ரசித்துப்பார்" எனும் தொனியில்....!
கூட்டத்தினரை அவர் உரையால் படாத பாடு படுத்திவிட்டு அவர் பேருரையை! முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார், அதற்குள் நேரம் வெகுவாக கடந்துவிட்டிருந்தது. அடுத்துப் பேச சுகி சிவம் அவர்கள் ஒலிப்பெருக்கியை நெருங்கினார். அதற்குள் ஏற்கனவே கேட்ட பேருரையால் மெர்சலாகிப் போயிருந்த மக்களில் பலர் நாளைக்கு வேலை எனும் சாக்கோடு எழுந்து புறப்பட ஆரம்பித்தனர்.
சிகி.சிவம் சுற்று முற்றும் தமது பார்வையை ஓடவிட்டார். தமது ஆழமான கணீரென்ற குரலில் "ஒரு மனிதனுக்கு 20 வயதில் காதல் வரவில்லையென்றால் அவனுக்கு உடலில் பிரச்சனை, ஒரு மனிதனுக்கு நாற்பது வயதிலும் ஒரு காதல் வருகிறதென்றால் அவனுக்கு மனதில் பிரச்சனை" என்று போட்டார் பாருங்கள் ஒரு போடு !(நிச்சயமாக இது திருமணமானவர்களுக்குத்தான்)
அவ்வளவுதான் ! அதுவரை தூங்கி வழிந்த அரங்கமே சடாரென விழித்துக்கொன்டதுபோல் அப்படி ஒரு ஆரவாரமும் கரவொலியும் அப்பொழுது அங்கே எழுந்தது, அவருக்கு முன் பேசிய கவிஞர் முகத்தில் ஈயாடவில்லை. வீடு திரும்ப எத்தனித்து எழுந்தவர்களும் அப்படியே அமர்ந்து மிகவும் சிறப்பாக அமைந்த அவர் உரையை முழுதாகச் செவிமடுத்த பின்னரே கலைந்து சென்றனர்.
இன்றும் அவரின் சாதுரியமும், சாமர்த்தியமும் மிளிரும் பேச்சுக்களை மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு எனினும். அன்று அவர் அந்தக் கவிஞருக்குக் கொடுத்த பதிலடி இருக்கிறதே, அது இன்றும் நினைவில் நின்று சிரிக்க வைக்கின்றது...! சொல்வேந்தர் சொல்வேந்தர்தான்....!
பி.கு : கவிஞரின் பெயரை இங்கே குறிப்பிடாவிட்டாலும் பலர் அவர் யாரென்பதை யூகித்திருக்கக்கூடும். சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பதால் எனக்கும் அவரைப்பிடிக்கும். அன்றைய அவரது உரையைத்தவிர :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக